Tuesday 3 April 2012

கோடையில் ஏற்படும் சிறுநீர் பிரச்சனையை  சமாளிப்பது எப்படி ?

      கோடைக்காலத்தில் உடலுக்கு தேவையான அளவு  நீர்சத்து ஆகாரங்கள் குடிக்காமால் இருப்பதால் .இதனால் சிறுநீர் வெளியேறும்  அளவு குறைகிறது .இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறுகிறது .இதனால் எரிச்சல் ,வலி ,மற்றும் கடுப்பும் ஏற்படுகிறது .

      வெகு நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது .

     சிறுநீரக பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கு  அதிகம் ஏற்படும் .

    சிறுநீரக பாதையில் ஈகோலை  என்னும்  கிருமியால் தொற்று ஏற்பட்டு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகிறது .இது வெயில் காலங்களில் பன்மடங்காக பெருக வாய்ப்புள்ளது .

   வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவதால்  உப்பு கலந்த கழிவு பொருட்கள் வெளியேரமால் ,கொஞ்சம் ,கொஞ்சமாக  படிந்து சிறுநீர் கற்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் .

அறிகுறிகள்

அடிக்கடி  சிறுநீர் கழிக்கலாம் போன்று உணர்வு வரும் .

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் , மற்றும் வலி ஏற்படும் .

அடிவயிற்றில் வலி எடுக்கும் .

குழந்தைகள் அதனை அறியமாலே சிறுநீர் கழிப்பார்கள்.

இந்நோய் அதிகமாகும் போது குளிருடன் காய்ச்சல் ஏற்படும் .


 இதை எப்படி தடுப்பது ?

அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் .

காரட்  உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .

அதிக காரமான உணுவுகளை தவிர்க்கவும் .

முள்ளங்கி ஜூஸ் 25 ml  தினமும் இரண்டு முறை சேர்க்க வேண்டும் .

எலுமிச்சை பழம் ஜூஸ் ஒரு நாளைக்கு மூன்று குடித்தால் சிறுநீர் கடுப்பு குறையும் .

இளநீர் குடிக்காலம் .

தினமும் தக்காளியை உணவில் சேர்ப்பதால் ,தக்காளியில் உள்ள வைட்டமின் சி ,சிறுநீர் எளிதாக வெளியேறவும் ,சிறுநீர் தொற்று varamaalum




    

 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes