Tuesday 17 April 2012

தூய்மையில்லாத பற்கள் இதயத்தை பாதிக்கும் ?


பல்லு போனால் சொல்லு போச்சு என்பதெல்லாம் அந்த காலம் , இன்று ஆரோக்கியமான உடல் மற்றும் இதயத்திற்கு பற்களின் சுத்தம் அவசியம் என்கிறது மருத்துவ உலகம் .

பற்களில் படிந்து இருக்கும் ஆபத்தை உண்டாக்கும் பாக்டீரியக்கள் தொண்டைக்கு பரவி இரத்தத்துடன் கலந்து இதயத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது .


பல் துலக்குவதன் மூலம் இதயத்தை பலபடுத்தலாம் என்கிறன்றனர் மருத்துவ நிபுணர்கள் .


பல் சொத்தையின் அறிகுறிகள்


  •      பல்லில் வலி

  •      ஈறுகளில் வீக்கம்

  •      வாயின் வெளியே வீக்கம்

  •      பல் கருப்பு நிறமாக மாறுவது 

  •      பல்லில் குழி ஏற்பட்டு உணவு பொருட்கள் தங்குவது .

  •     குளிர்ந்த அல்லது சூடான  உணவு சாப்பிடும் போது பல்லில் கூச்சம் ஏற்படுவது .


தவிர்க்க வேண்டியவை ?

  •      அடிக்கடி தேனீர் ,காபி போன்றவை குடிப்பது .

  •      குளிர்ந்த நீரை குடிப்பது .

  •      குளிர்பானங்கள்  குடிப்பது .

  •      அதிகம் ,இனிப்பு ,காரம் சாப்பிடுவது .

  •      பாக்கு ,பீடா போடுதல் ,சிகெரட்  புகைப்பது .

  •      மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் .



ஆரோக்கியமான பற்களுக்கு

  •      தினம் இரண்டு முறை பல் துலக்குவது .

  •      இனிப்பான உணவு பொருட்களை சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்க வேண்டும் .

  •      மூன்று அல்லது ஐந்து மாதத்திற்கு ஒரு முறை பிரசை மாற்ற வேண்டும் .


  •      ப்ளுரைடு உள்ள பற்பசைகளை பயன்படுத்த வேண்டும் .
   

உறுதியான பற்களுக்கு ஆரோக்கியமான உணவு ?


  •      பற்கள் அயோடின் மற்றும் பாஸ்பரஸ் சத்து குறைவினால் விரைவில் வலுவிழக்கின்றன .இதை தடுக்க  பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும் . 

  •      வைட்டமின் சி சத்து அதிகம் உள்ள ஆரஞ்சு ,சாத்துக்குடி , எலுமிச்சை ,பப்பாளி ,திராட்ச்சை இவற்றில் ஏதாவது ஒன்றை தினம் சேர்த்து கொள்ள வேண்டும் .

  •     கேழ்வரகு ,மீன் ,கீரை வகைகள் ,முட்டைக்கோஸ்  காலிபிளவர் அடிக்கடி சேர்த்து கொள்ளவும் .

  •     தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் .

  •     தினம் 2 டம்பளர்  பால் அவசியம் .

  •     இனிப்பு ,உப்பு ,காரத்தை குறைக்கவும் .

  •     பூண்டு ,வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சத்தி அதிகரிக்கும் .

  •      வெண்டைக்காய்,வெள்ளரிக்காய் ,மாங்காய் .கேரட்களை பச்சையாக கடித்து தின்பதால் பற்கள் பலம் பெறும்.

  •     கால்சியம் சத்து அதிகம் உள்ள பால் , முட்டை சாப்பிடுவது பல்லுக்கு ஆரோக்கியமும் ,அழகும் ஏற்படும் .

     
    


Sunday 15 April 2012

ஒரு வயது வரையிலான குழந்தையின் சரியான வளர்ச்சி படிகள்

குழந்தையின் வளர்ச்சியை பல்வேறு வளர்ச்சி படிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் .ஒரு வயது வரை குழந்தையின் வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து குழந்தை சரியான முறையில் வளருகிறதா  என்பதை அறிந்து கொள்ளலாம் .ஒன்றரை மாதமானதும் கீழ்காணும் முன்னேற்றங்கள் குழந்தையின் வளர்ச்சியில் காணப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும் .


ஒன்றரை மாதம்

      ஒன்றரை மாதமானதும் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்ளும் .


இரண்டாவது மாதம்

      இரண்டாவது மாதமானதும் தாய் முகம் பார்த்து சிரிக்கும் .


மூன்றாம் மாதம்


      மூன்றாம் மாதம் ஆனதும்  குழந்தை தலையைக் கொஞ்சம் தூக்கும் ,குரல் ஒலி வரும் திசையைத்  திரும்பி பார்க்கும் .


நான்காவது மாதம்

     நாலாவது மாதம் குழந்தை புரளும் ,ஒருகளிக்கும் ,கையில்  கிடைத்த பொருட்களை பிடித்து கொள்ளும் .

 ஐந்து அல்லது ஆறா மாதம்


    ஐந்து அல்லது ஆறா மாதம் , குழந்தைத் தலையை உயர்த்தி கைகளை ஊன்றி எழும்ப முயற்ச்சிக்கும் .தலையணையில் சாய்த்து உட்கார வைக்கலாம் .


 எட்டாமாதம்

   எட்டாமாதம்   தலையைனையை முட்டு கொடுக்காமல் உட்கார வைக்க முடியும் .பற்கள் முளைக்க துவங்கும் .


ஒன்பது அல்லது பத்தாம் மாதம்

   ஒன்பது அல்லது பத்தாம் மாதம் குழந்தை முழங்கால்களை ஊன்றி தவழத்  தொடங்கும் .


பதினொன்று  அல்லது பன்னிரண்டாவது மாதத்தில்


     பதினொன்று அல்லது பண்ணிரண்டவாது மாதத்தில் ஓர் ஆதாரத்தைப் பிடித்து கொண்டு எழுந்து நிற்கும் .

ஒன்று அல்லது ஒன்றைரை வயதில்

   ஒன்று அல்லது ஒன்றரை வயதில் குழந்தை பிடிப்பு ஏதும் இல்லமால் மெல்ல நடக்க தொடங்கும் . 














கர்ப்பகாலத்தில் ஏற்படும் அபாயகரமான அறிகுறிகள்?

கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் ஏற்படும் அபாய குறிகளை அறிந்து கொள்ள வேண்டும் .கர்ப்பகாலத்தில் ஏற்படும் அபாயகுறி

  • கால்வீக்கம் 

  • கடுமையான இரத்த சோகை 

  • இரத்த கசிவு 

  • கடுமையான அடி  வயிற்று வலி .

  • தொடர்ந்து வாந்தி .

  • கடுமையான ஜுரம்  .

  • அடிக்கடி தலைவலி  .

  • வலிப்பு .

  • வயிற்றில்  குழந்தை அசைவு இல்லை ,அசைவு குறைவு அல்லது அசைவு அதிகம் .   இதில் ஒரு அறிகுறி இருந்தாலும் கர்ப்பிணிகள் மருத்துவ சிகிச்சை உடன பெற வேண்டும் .






தெரிந்து கொள்வோம் உணவு ஜீரணமாகும் நேரத்தை

 உணவு ஜீரணமாகும் நேரத்தை அறிவதன் மூலம்  அஜீரண கோளறு ஏற்படமால் தவிர்த்து .சரியான உணவை சரியான நேரத்திற்கு சாப்பிடலாம் .

  • வடிகட்டிய தண்ணீர் பழச்சாறு  =  15 - 20 நிமிடங்கள் .

  • கெட்டியான பழச்சாறு        
           காய்கறி சூப்
           தர்பூசணி
          ஆரஞ்சு
          திராட்சை பழங்கள்  இவை அனைத்தும்   =   20  - 30 நிமடங்கள்

  • ஆப்பிள் ,செரி பழங்கள்   =  40 நிமிடங்கள் .

  • தக்காளி 
         வெள்ளரி
         காய்கறி சாலட்    =  40 நிமிடங்கள் .

  • காலிபிளவர் 
         சோளம்  ஆகியவை     = 45 நிமிடங்கள்

  • கேரட் ,
          பீட்ரூட் போன்ற வேர்கிழங்குகள்  = 50  நிமிடங்கள் .

  • சர்க்கரை வள்ளிகிழங்கு ,
          உருளை கிழங்குகள்       =    1 மணி நேரம் .

  • அர்சி
         ஓட்ஸ்     = 1 1 / 2 மணி நேரம்

  •     சோயா பீன்ஸ் ,
             பால் ,
             பாலடைக்கட்டி      = 2  நேரம்

  • முட்டை   =  45 நிமிடம் 

  • மீன்   = 1 /2  மணி நேரம் 

  • கோழி   = 2 மணி நேரம் .

  • வான் கோழி  = 2 1 / 4 மணி நேரம் .

  • ஆட்டிறைச்சி ,
           மாட்டிறைச்சி    = 3  -  4  மணி நேரம் .

  • பன்றி இறைச்சி   =  5  மணி நேரம் .

 

 


 

கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை ?


  • உணவில் பச்சைக்காய் கறிகள் , பழங்கள், அதிகம் இருக்க வேண்டும் .

  • கால்சியம்  சத்து நிறைந்த உணவுகளை உன்ன வேண்டும் .

  • கர்ப்ப காலத்தில் வாந்தி  வரும்  இதனால் சாப்பிடமால் இருக்ககூடாது .பல வேளை களாக பிரித்து சாப்பிடலாம் . ஜூஸ் அதிகம் குடிக்கலாம் .


  • கர்ப்பிணிகள் வயிறு எப்போதும் காலியாக இருக்க கூடாது .

  • உடல் சோர்வாக இருக்கும் போது ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம் .

  • குமட்டுதல் வரும் போது எலுமிச்சை பழத்தை நுகர்ந்தால் ,குமட்டுதல் குறையும் .

  •  இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் .பேரிச்சை ,மாதுளை ,கீரை வகைகள் ,முருங்கைகீரை  சாப்பிடலாம் .

  • வெல்லம் சேர்த்த உணவு வகைகளை உண்ணலாம் .

  • காபி ,டீயை தவிர்த்து  பாலுடன் வேறு ஏதாவது கலந்து சாப்பிடலாம் .

  • உணவில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்த்து கொள்ளலாம் .

  • காலையில் பழச்சாறு அதிகம் குடிக்க வேண்டும் .

  • மாதுளை பழம் சாப்பிடலாம் .

  • நாவல் பழம் சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்றும் ,குங்குமபூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது தவறான கருத்தாகும் .மனிதன் உடலில் நிறங்களை நிர்ணயிப்பது மெலனின் எனப்படும் நிறமிகளே.

  • கர்ப்ப காலத்தில் இரும்பு சத்து மாத்திரை சாப்பிடுவதால் உடல் லேசாக கருத்து காணப்படும் , இது பிறகு மாறிவிடும் .இதனால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்பது தவறு .

  • கர்ப்பிணி பெண்கள் காலையில் சீக்கிரமாக சாப்பிட வேண்டும் .இதனால் இரத்தத்தில் சர்கரையின் அளவு குறையாமலிருக்கும் ,அடிக்கடி மயக்கம் வராது.

  • குழந்தை வளர வளர வயிற்று குடல் ஒரு பக்கம் தள்ளும் இதனால் அதிகம் சாப்பிட முடியாது ,சீக்கிரமும் பசிக்காது  . அந்த  நேரங்களில் ஜூஸ் ,முளைகட்டிய  தானியங்கள் , போன்றவற்றை பல வேலைகளாக பிரித்து சாப்பிட வேண்டும் .

  • பிரசவ காலத்திற்கு பின் உடற் பயிற்சி  செய்ய வேண்டும் அது வயிற்று  தசைகளை வலுபெற செய்யும்.

  • கர்ப்பிணிகள் தினம் ஒரு வாழை பழம் சேர்த்து கொள்ளலாம் .இது உடல் சூட்டை தணிக்கும் , மலசிக்கல் வராமால் தடுக்கிறது .

  • கர்ப்பகாலத்தில் அதிகம் தண்ணீர் குடித்தால் கால் வீங்கும்  என்பது தவறானது .

  • கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் . இதனால் மலசிக்கல் தடுக்கப்படும் .

  • பிரசவம் முடிந்தவுடன்  வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக துணியை வயிற்றில் கட்டகூடாது .பிரசவம்  முடிந்து ஆறு வாரம் கழித்து அதற்க்கான பெல்ட்டை அணியலாம் .

  • கர்ப்பகாலத்தில் சிலர்க்கு சுகர் ,தைராய்டு, இரத்தழுத்தம் பிரச்னை  உள்ளவர்கள் அதற்க்கான மருந்துகளை கட்டாயம் எடுத்தக்கொள்ள வேண்டும் . அது குழந்தையை பாதிக்காது .

  • அன்னாசி பழம் கொய்யா , பப்பாளி பழத்தை கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும் . இது உடலுக்கு சூட்டை தரும் பழம் என்பதால் இதை தவிர்ப்பது நல்லது .

இனி வேண்டாம் வயாகரா ?



  • இந்தியாவில் பண்டைய காலத்தில் மன்னர்கள் ஜாதிக்காயை இயற்க்கை வயகராவாக பயன்படுத்தி உள்ளனர் .

  • ஜாதிக்கையில் ஆண்மைக்கான மருத்துவ பலன்கள் நிறைய உள்ளன.

  • இது ஒரு விதமான போதையை உடலில் உண்டு பண்ணுகிறது.

  • ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து கொள்ளவும் 5 கிராம் அளவுக்கு தினம் காலை,மாலை பசும் பாலில் கலந்து குடித்து வர ஆண்மை குறை நீங்கும் .

  • தூக்கமில்லமையால் கூட குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம் .

  • ஜாதிக்காயில் உள்ள ஒரு வித அமிலம் தூக்கத்தை தூண்டுகிறது இதனால் உறக்கமின்மையை  தடுக்கிறது .

  •   ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் வீதம் சாபிட்டால் போதும் .

  • ஜாதிக்காய் சாப்பிடுவதினால் 

  1. மனஅழுத்தத்தை  போக்கும்.
  2. காம உணர்வை தூண்டும் .
  3. ஆண்மை குறைவை போக்கும் .
  4. நரம்பு தளர்ச்சியை போக்கும் .
  5. விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் .
  6. உடல் வலிமையாக்கும்  தன்மை கொண்டது .        
  இயற்கையான ஜாதிக்காய் சாப்பிட்டு இல்லறத்தில் சுகம் பெறலாம் .

Tuesday 10 April 2012

இரத்த சோகையை குணமாக்கும் பீட் ரூட்





     பீட்ரூட்டில் நிறைய சத்துகள் உள்ளன .இதில் வைட்டமின் சி ,பொட்டசியம் ,போலாசின் ,பீட்ட கரோட்டின் ,மாவுசத்து,இரும்பு சத்து அதிகம் உள்ளன .

    பெண்கள் அதிகம் பாதிக்கபடுவது இரத்த சோகையினால்,இதனை தினம் பீட்ரூட்டை உணவில் சேர்ப்பதன் மூலம் குணப்படுத்தலாம் .

பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள் 

இரத்த சோகை நோய் 

  •   பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாறுடன் தோய்த்து சாப்பிட்டு வர இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி அதிகமாகும் .
  •  பீட்ரூட்டில் இரும்பு சத்து அதிகம் உள்ளது .
  • இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகபடுத்தி இரத்த சோகை நோய் வராமால் தடுக்கிறது .
  • உடல் சோர்வு அடைவதையும் தடுக்கிறது .
  • இதில் உள்ள வைட்டமின் சி உணவில் இரும்பு சத்தை உறிச்ச  உதவுகிறது .
  • நமது உடலில் ஆக்சிஜன் உறிச்சும் சத்தியை அதிப்படுத்துகிறது.
இதய நோய்

  •    பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்கள் ,இரத்தில் நைட்ரிக் ஆக்சைடுகளை  உருவாக்கின்றன .இது இரத்த குழாய்கள் விரிவடைய உதவுகின்றன .இதனால் இரத்த ஓட்டம் சீராகிறது ,இரத்த அழுத்தமும் குறைக்கப்படுகிறது .
  • இதய நோய் வரமால் தடுக்கிறது .
  • பீட்ரூட்டில் உள்ள நார்சத்து கெட்ட கொலஸ்டிராலை குறைத்து நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்திகிறது .
  • பீட்ரூட்டில் அதிக அளவு  பொட்டசியம் உள்ளது .இது இதயம்சரியாக இயங்கக உதவுகிறது .இதனால் இதய நோய் வராமால் தடுக்கிறது .
தோல் நோயிக்கு

  •  பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து ,சொறி ,சிரங்கு ,பொடுகு  ஆறாத புண்கள் மேல் தடவினால் அனைத்தும் குணமாகும் .
  • தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால் தீப்புண் கொப்பளங்கள் ஏற்படாது ,விரைவில் குணமாகும் .
 கர்ப்பிணி பெண்களுக்கு

  •   பீட்ரூட்டில் கருத்தரிக்கும் பெண்களுக்கு தேவையான சத்துகள் உள்ளன .
  • பிரசவ காலத்திற்கு முன்னும் பின்னும் ஏற்படும் இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது .
  • குழந்தையின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும் .
  • கர்ப்பிணி பெண்கள்  உணவில்   பீட்ரூட் சேர்த்து கொள்ள வேண்டும் .
  • போலிகமிலம் குறைவால் குழந்தைக்கு ஏற்படும் நோயையும் தடுக்கலாம் .

செரிமானத்திற்கு

  •  பீட்ரூட்டில் உள்ள நார்சத்து ,உணவு செரிக்க உதவுகிறது .
  • மலசிக்கல் வராமால் தடுக்கிறது .
  • மூல நோயயை குணப்படுத்துகிறது .
  •   பீட்ரூட் சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் .
  • இது இயற்க்கை மலமிளக்கியாகவும் செயல்படுகிறது  .

சிறுநீரக நோய்

  •     பீட்ரூட் சாறுடன் வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகம் சுத்திகரிக்கப்படும் .
  • பீட்ரூட்டை  அடிக்கடி உணவில் சேர்ப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கலாம் .
பித்த நோய்

  • பீட்ரூட் பித்தத்தை தடுக்கிறது .
  • பீட்ரூட் சாறுடன் ,வெள்ளரி சாறு கலந்து சாப்பிட்டு வர பித்தப்பை      சுத்திகரிக்கப்படும் .
  • பித்தத்தால் ஏற்படும் வாந்தியையும் குறைக்கிறது .
கண் நோய்

  • பீட்ரூட்டில் உள்ள பீட்டா கரோட்டின் ( வைட்டமின் ஏ )கண் புரை நோய் வரமால் தடுக்கிறது .
  • கண் பார்வை நன்றாக தெரியவும் உதவுகிறது .

புற்றுநோய்

  • பீட்ரூட்டில் உள்ள பீட்டா கரோட்டின் புற்று நோய் வராமால் தடுக்கிறது .
  • புற்று நோய் பரவுவதையும் தடுக்கிறது .
  • ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோயைகளை தடுக்கிறது .
  • உடலில் நோய் எதிர்ப்பு சத்தியை அதிகப்படுத்துகிறது .
மூச்சு திணறல்

  • பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி ஆஸ்துமா நோய் வராமால் தடுக்கவும் மற்றும் நுரையீரல் புற்று நோய் வராமால் தடுக்கிறது .
  • இது  நமது உடலில் ஆக்சிஜன் உறிஞ்சும் சத்தியை அதிகப்படுத்துகிறது .

குறிப்பு

  • பீட்ரூட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்க கூடாது இதனால் இதில் உள்ள வைட்டமின் சி அழிந்துவிடும் .
  • பீட்ரூட்டை மூடி சமைக்க கூடாது இதனால் இதில் உள்ள ஆக்சா லிக்     அமிலம் வெளியேராமால் இருந்து விடும் .           



என்றும் இளமை உங்கள் கையில்



உணவு பழக்கத்தின் மூலம் இளமையை தக்க வைத்து கொள்ளலாம்  என்கிறார்   பிங்க் ஃபிட்னஸ் ஸ்டுடியோ ஊட்ட சத்து நிபுணர் ரிஸ்மியா முகைதீன் .

  • மூன்று வேலை சாப்பாடு. இதனுடன் இடையிடையில் ஏதேனும் சாப்பிட வேண்டும் . சுண்டல் ,ஓட்ஸ் ,சாலட் ,ஜூஸ் ,மோர் போன்றவை சாப்பிடலாம் .இதனால் உடல் வளர்சிதை மாற்றம் நன்றாக இருக்கும் .

  • தேவைப்படும் கலோரியின் அளவு ஒருவர்க்குஒருவர்  மாறுபடும் ,ஆண்களுக்கு சராசரியாக தேவைப்படும் கலோரி 2425 , பெண்களுக்கு 1875 கலோரி .

  • காலையில் சாப்பிடமால் இருக்க கூடாது .காலையில் மட்டும் வயிறு நிறைய சாப்பிடலாம் . மதியம்  மற்றும் இரவு நேரங்களில் அளவாக சாப்பிட வேண்டும் .மதியும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் தூக்கம் வரும் ,இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடுவதால்  தூக்கம் கெடும் .

  • நாம் உண்ணும் உணவு சரிவிகத உணவாக இருக்க வேண்டும் .கர்போஹைட்ரடே 50 %,புரதம் 30 %,கொழுப்பு 15 % மற்றும் வைட்டமின் தாது உப்புகள் 5 ஆக இருக்க வேண்டும் .

  • உணவை அவசரமாக விழுங்குதல் கூடாது .உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும் .சரசரியாக ஒரு முறை உணவை விழுங்க 15 முறை மெல்ல வேண்டும் . நாம் பொதுவாக 7 முறைதான் மெல்லுகிறோம்.

  • தினம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும் .கீரையில் உள்ள நார்சத்துக்கள் கொழுப்பை கரைகின்றன .

  • தினம் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும் . உடல் உஸ்னமாக உள்ளவர்கள் வெந்தையத்தை  ஊற வைத்து அதை சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும் .

  • தினம் ஒரு பேரிச்சை பழம் ,கைப்பிடி அளவு பாதாம் பருப்பு இல்லையென்றால் வேர்கடலை சாப்பிடலாம் .

  • உணவு சமைக்கும் போது அதிகமாக  எண்ணெய் பயன்படுத்த கூடாது .ஒரே எண்ணெய் பயன்படுத்தாமால் நல்லெண்ணெய் ,கடலெண்ணெய் என்று மாற்றி பயன்படுத்தவும் .

  • சன்ப்லோவேர்,சப்லோவேர்,ஆயில் பயன்படுத்தவும் . கொழுப்பை கூட்டும் பாமாயில் ,வனஸ்பதி ,  நெய்  ஆகியவற்றை தவிர்க்கவும் .

  • வாரம் இரு முறை சிக்கன் சாப்பிடலாம் .இரவில் அசைவ உணவு தவிர்ப்பது நல்லது .

  • தினம் ஒரு மனிதன் சராசரியாக இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்

  • நாம் உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு குறைத்தாலே  நலமோடு வாழலாம் . ஒரு நாளைக்கு 2 டீஸ்பூன் உப்பு மற்றும் 3 டீஸ்பூன் சர்க்கரையே உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது .

  • பேக்கிங் செய்யப்பட்ட உணவில் , உணவு கெட்டுபோகமால் இருக்க அதிக அளவு உப்பும் ,எண்ணெயும் பயன்படுத்தபடுகிறது .இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல .

  • ஒரு நாளைக்கு 2 கப்  டீ மட்டும் போதுமானது . க்ரீன் டீ உடலுக்கு நல்லது .

  • தினம் இரவில் ஒரு டம்பளர்  பால் குடிக்க வேண்டும் சர்க்கரை இல்லமால் .

  • மீன்கள் வாரம் இரு முறை சேர்த்து கொள்ளலாம் .

  • தினம் பழங்கள் மற்றும் பழச்சாறுகள் சேர்த்து கொள்ளலாம் . 

  • குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் .

  • தினம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி  வேண்டும் . இவ்வாறு செய்து வந்தால் இளமை என்றும் நம் கையில் .

எண்ணெயில் பொறித்த உணவுகளை விட ,ஆவியில் வேக வைத்த  உணவுகளை சாப்பிட வேண்டும் .

மட்டன் மற்றும் பீப் மாதம் ஒரு முறை எடுத்து கொள்ளலாம் .  




Monday 9 April 2012

பிரசவத்திற்கு பின் கவனிக்க வேண்டியவை




  • பொதுவாக சுகபிரசவம் அல்லது சிசேரியனில் இரத்த இழப்பு அதிகமாக இருக்கும் . இதை ஈடு செய்ய வேண்டும் . அதற்க்கு பிரசவத்திற்கு பின்னும் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும.

    • கீரைகள் ,பேரிச்சபழம் ,கேழ்வரகு ,கம்பு ,கறிவேப்பில்லை பொடி,போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .

    • தினம் ஒரு கீரை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .

    • பிரசவத்திற்கு பின் உடலை நன்கு பராமரிக்க வேண்டும் .

    • குழந்தைக்கு தாய் பால் மட்டும் உணவு என்பதால் , தாய்மார்கள் தங்கள் உணவுகளில் தனி கவனும் செலுத்த வேண்டும் .இதனால்  குழந்தையும்  நல்ல வளர்ச்சியுடன் இருக்கும் .

    • கொழுப்பு  சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும் .

    • உணவில் புரதசத்து ,நார்சத்து ,இரும்பு சத்து ,  மற்றும் கால்சியம் சத்து  இருக்க வேண்டும் .

    • குழந்தைக்கு பால் கொடுப்பதால்  அதிகமாக உணவில் புரதம் மற்றும் கால்சியம் சேர்த்து கொள்ள வேண்டும் .

    • பால் ,பால் சார்ந்த பொருட்கள் ,மீன் ,நண்டு ,இறால் ,சோளம்  போன்ற கால்சியம் சத்து அதிகம் கொண்ட  உணவுகளை  உன்ன வேண்டும் .

    • தினமும் குறைந்தது இரண்டு டம்பளர் பால் குடிக்க வேண்டும் .

    • பாதம் ,பிஸ்தா ,அக்ரூட்,பச்சை வேர் கடலை ,மீன் , முட்டை போன்ற  புரத சத்து அதிகம் உள்ள உணவுகளை உன்ன வேண்டும் இதனால் பால் நன்றாக சுரக்கும் .

    • தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் ,இது பால் நன்றாக சுரக்கவும் ,மல சிக்கல் பிரச்சனை வராமால் தடுக்கவும் உதவுகிறது .

    • அதிக கொழுப்பு உள்ள உணவு ,கிழங்கு வகைகள் மற்றும் ,தேங்காய் போன்ற உணவுகளை  பிரசவம் ஆன பின் ஒரு மாத காலத்திற்கு தவிர்க்க வேண்டும் .
    .இதை  சாப்பிடுவதால் வாயு ,மலச்சிக்கல் ,அஜீரண கோளறு ஏற்படும் .

    • இஞ்சி பூண்டு ,மிளகு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .

    • எளிதில் ஜீரணமாகும் உணவை உட்கொள்ள வேண்டும் .

    • சுறாபுட்டு உணவில் சேர்த்து கொண்டால் பால் நன்றாக சுரக்கும் . 





    Friday 6 April 2012

    அளவான பகல் குட்டி தூக்கம் நல்லதா ?



    • பகலில் தூங்கினாலே உடல் குண்டாகி விடும் என்று பகலில் தூங்காமல் இருப்பவருக்கு ஒரு நற் செய்தி .பகலில் தூங்கினால் உடல் குண்டாகிவிடும் என்பது தவறான கருத்து .வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு அளவுக்கு அதிகமாக தூங்கினால் தான் ஆபத்து என்கிறது ஆய்வு முடிவுகள் .

    • இரவில் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்குவது உடலுக்கு நல்லது .

    • நமது உடல் ஒரு நாளைக்கு இரண்டு வேலை தூங்கும் விதமாகதான்  அமைக்க பட்டுள்ளது    .காலை முதல் மாலை வரை தொடர்ந்து வேலை செய்வதால் உடலும் மனமும் சோர்வடைகிறது . அந்த நேரத்தில் சிறிது நேரம் குட்டி தூக்கம்  நம் உடலையும் மனதையும் புத்துணர்ச்சி பெற வைக்கிறது .

    • கலிபோர்னிய ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டது  என்னவென்றால்  பகலில் போடும் குட்டி தூக்கம் மூளையின் செயல்  திறன் அதிகரித்து அறிவு திறன் வளர்கிறது என்கிறது .

    • பகல் நேரத்தில் தூங்குவது இதயத்திற்கும் நல்லது என்கிறது .

    • பகலில் அளவாக தூங்கினால் மட்டுமே நல்லது .வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் என்பது ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் என்று நீண்டால்  நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது .

    • அளவாக தூங்கி நலமாக வாழுங்கள் அறிவுடன் .

    மாதவிடாய் சரியாக வருவதற்கு செம்பருத்தி பூ


    பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வருவதற்கு , 4 செம்பருத்தி பூக்களை அரைத்து பசையாக செய்து கொள்ளவேண்டும் . இதை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் 7 நாட்களுக்கு சாப்பிட்டு வரலாம் .

    செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூளாக்கி , ஒரு தேக்கரண்டி அளவு தூளை காலையிலும் மாலையிலும் 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சரியாக வரும் .

    இருமல் தீர 

    செம்பருத்தி பூ இதழ்கள் 15 எடுத்து கொள்ள வேண்டும் .அதனுடன் ஆடாதோடை இலை மூலிகை தளிர் இலைகள் மூன்றை சேர்த்து நசுக்கி , 2 தம்பளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி அதில் 1 /2  தேக்கரண்டி தேன் கலந்து காலை , மாலையில் 3 நாட்கள் குடித்து வந்தால் இருமல் தீரும் .

    தலையில் பேன்கள் குறைய 

    செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் தலை பேன்கள் குறையும் .

    இதயம் பலம் பெற 

    செம்பருத்தி பூவை பசுமையாகவே  அல்லது உலர வைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை , மாலையில் குடித்து வந்தால் இதயம் பலம் பெறும்.

    சிறுநீர் எரிச்சல் குணமாக 

    4  செம்பருத்தி இலைகளை 2 தம்பளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி ,வடிகட்டி கொள்ள வேண்டும் ,இதனுடன் கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்து வந்தால்  சிறுநீர் எரிச்சல் குணமாகும் .

    4  செம்பருத்தி மொட்டுகளை 2 தம்பளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டுடன் சேர்த்து குடித்து வந்தாலும் சிறுநீர் எரிச்சல் குணமாகும் .

         

    Tuesday 3 April 2012

    கோடையில் ஏற்படும் சிறுநீர் பிரச்சனையை  சமாளிப்பது எப்படி ?

          கோடைக்காலத்தில் உடலுக்கு தேவையான அளவு  நீர்சத்து ஆகாரங்கள் குடிக்காமால் இருப்பதால் .இதனால் சிறுநீர் வெளியேறும்  அளவு குறைகிறது .இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறுகிறது .இதனால் எரிச்சல் ,வலி ,மற்றும் கடுப்பும் ஏற்படுகிறது .

          வெகு நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது .

         சிறுநீரக பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கு  அதிகம் ஏற்படும் .

        சிறுநீரக பாதையில் ஈகோலை  என்னும்  கிருமியால் தொற்று ஏற்பட்டு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகிறது .இது வெயில் காலங்களில் பன்மடங்காக பெருக வாய்ப்புள்ளது .

       வெளியேறும் சிறுநீரின் அளவு குறைவதால்  உப்பு கலந்த கழிவு பொருட்கள் வெளியேரமால் ,கொஞ்சம் ,கொஞ்சமாக  படிந்து சிறுநீர் கற்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் .

    அறிகுறிகள்

    அடிக்கடி  சிறுநீர் கழிக்கலாம் போன்று உணர்வு வரும் .

    சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் , மற்றும் வலி ஏற்படும் .

    அடிவயிற்றில் வலி எடுக்கும் .

    குழந்தைகள் அதனை அறியமாலே சிறுநீர் கழிப்பார்கள்.

    இந்நோய் அதிகமாகும் போது குளிருடன் காய்ச்சல் ஏற்படும் .


     இதை எப்படி தடுப்பது ?

    அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் .

    காரட்  உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் .

    அதிக காரமான உணுவுகளை தவிர்க்கவும் .

    முள்ளங்கி ஜூஸ் 25 ml  தினமும் இரண்டு முறை சேர்க்க வேண்டும் .

    எலுமிச்சை பழம் ஜூஸ் ஒரு நாளைக்கு மூன்று குடித்தால் சிறுநீர் கடுப்பு குறையும் .

    இளநீர் குடிக்காலம் .

    தினமும் தக்காளியை உணவில் சேர்ப்பதால் ,தக்காளியில் உள்ள வைட்டமின் சி ,சிறுநீர் எளிதாக வெளியேறவும் ,சிறுநீர் தொற்று varamaalum




        

     

    அளவான கத்தரிக்காய் அருமையான மருந்து




        கத்தரிக்காய் என்றாலே நாம் நினைப்பது கத்தரிக்காய் சாப்பிட்டால் அரிப்பு ,கரப்பான் என்றுதான்  ஆனால் கத்தரிக்காயை அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு வலிமை தரும் சிறந்த மருந்தாகும் .

       கத்தரிக்காய் எளிதில் கிடைக்க கூடியது .இது வெள்ளை ,ஊதா மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கிறது .

      கத்தரிக்காய் நீர் சத்து நிறைந்தது . இதில் வைட்டமின் ஏ ,பி 1 ,பி 2 ,புரதம் ,கார்போஹைட்ரடே , இரும்புசத்து ,கால்சியம்,  மற்றும் சோடியம் , பொட்டசியம் உள்ளன .

      இதில் உள்ள விட்டமின்கள் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

      கத்தரிக்காயுடன்  தக்காளியும்  சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால்  பசியையும் தூண்டி ,பசியின்மையை அகற்றுகிறது .

      ஆரம்ப நிலையில் உள்ள சிறுநீரக கற்களையும் கரைக்கிறது .

    இது மலேரியாவால் ஏற்படும் மண்ணீரல் வீக்கத்தையும்  குணப்படுத்துகிறது .

      உடல் சோர்வடைவது ,மூச்சு விடுதல் சிரமம் , தோல் மரத்து விடுவது தடுக்கபடுகிறது .

      முற்றிய கத்தரிக்காயில் வைட்டமின் ஏ உள்ளது இது உடல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது .

     கண்பார்வை திறனை அதிகபடுத்துகிறது .

    கத்தரிக்காய் உடலுக்கு சூடு தரும் காய்கறிகளில் ஒன்று .இதை மழை நேரங்களில் குழம்பு வைத்து சாப்பிட்டால் உடல் கதகதப்பாக இருக்கும் .

    கத்தரிக்காய் வற்றல் குழம்பு  வைத்து சாப்பிடலாம் . இது உடல் பருமனை குறைக்கும் , நீர் கனத்தை குறைக்கும் .
    கத்தரிக்காய் சூடு தரும் காய் என்பதால்  அரிப்பு ,புண்  ,சொறி , சிரங்கு  உள்ளவர்கள் இதை உண்பதை தவிர்ப்பது நல்லது .

     கர்ப்பிணி பெண்களும் கத்தரிக்காய் தவிர்க்க வேண்டும் .

      கத்தரிக்காயை அளவோடு உணவில் சேர்த்து வந்தால் இது உடலுக்கு வலிமை மற்றும் நன்மையும் தருகிறது .


      

    Monday 2 April 2012

     கத்தரிக்காயில்  உள்ள சத்துக்களின் அளவு

    கால்சியம்     ----- 525  mg

    இரும்புசத்து  -----  6 mg

    கார்போஹைட்ரடே ---- 17 .8 g

    நார்சத்து  ---- 4 .9

    புரதம்  ---- 8 g

    சோடியம்  ---- 62 mg

    பொட்டசியம்  --- 618 mg   மற்றும் வைட்டமின் பி 1 ,பி 2  மற்றும் ஏ , பாஸ்பரஸ்  சத்துகளும் உள்ளன .
     


    வாய் புண் குணமாக வேண்டுமா ?


      வாய் புண்கள் பல காரணங்களால் ஏற்படுகிறது ,இதில் முக்கியமாக ஜீரண கோளாறு,மன அழுத்தம் ,உடல் சூடு ஆகியவற்றால் வாய் புண் ஏற்படுகிறது .வாய் புண்களால் சாப்பிடுவதும் ,பேசுவதும் கூட கஷ்டமாகிவிடுகிறது.இதிலிருந்து மிக எளிதாக பாதுகாத்து கொள்ளலாம்  மற்றும் குனபடுத்தியும் விடலாம் பாட்டி வைத்தியத்தில் .

    • வாய்  புண் வைட்டமின் சி குறைவால் ஏற்படுகிறது .வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் ஜூஸ் குடிக்காலம்.
    • வெது வெதுப்பான தண்ணீரில் சிறதளவு உப்பு போட்டு வாய் கொப்பளிக்க்கலாம்.இது வாய் புண்  சீக்கிரம் குணமாக உதவுகிறது .
    • மீன் ,இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் .இது  உடலில் அமில தன்மையை  அதிகபடுத்துகிறது இதனால் வாய் புண்  குணப்படுத்துவதும் தாமதமாகிவிடுகிறது .
    • தினமும்  காலையில் வெறும் வயிற்றில் சிறு மஞ்சள் துண்டுகள் சாப்பிட்டு வந்தால் வயிற்று மற்றும் வாய் புண் குணமடையும் .
    • புதினா இலையை அரைத்து அதன் சாற்றை தடவினால் வலி மற்றும் எரிச்சல் குணமாகும் .
    • சூட்டை தணிக்க இளநீர் அருந்தலாம் .
    • புளிப்பு சுவையுடைய தயிர் ,மோர், உணவில் சேர்த்து கொள்ளலாம் .
    • துளசி இலைகளை கழுவி பின்னர் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும் .
    • தினமும் மூன்று வேலை கொய்யா இலையை  மென்று அதன் சாற்றினை விழுங்கி வந்தால் வாய் புண் குணமாகும் .
    • வாழை பூ உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண் மற்றும் வாய் புண் குணமாகும் .
    • அதிகமான காரம் சேர்த்துக் கொள்வது தவிர்க்க வேண்டும் .

    Sunday 1 April 2012

    கோடையில் எந்த உணவுகள் சாப்பிடலாம் ?

    கோடையில் எந்த உணவுகள் சாப்பிடலாம் ?









    கோடை காலம் வந்தாலே அதிலிருந்து நாம் எப்படி நம்மை காத்து கொள்வது என்பதே பெரும் கவலையாக அமைந்து விடுகிறது .

    நாம் எவலேதான் தண்ணீர் குடித்தாலும்  உடலின் நீர் சத்தை சமநிலையில் வைத்து கொள்ளமுடிவதில்லை .வெறும் தண்ணீர் மட்டும் இந்த பணியை செயிது விட முடியாது .

    மனித உடலில் 60 விழுக்காடு தண்ணீர் சத்து உள்ளது . உடலில் தண்ணீர் சத்து குறையும் போது
    பல நோயைகள் ஏற்படுகிறது .இதுலிருந்து நம்மை காத்துக்கொள்ள .தினமும் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து கொள்ள வேண்டும் .

    பழங்கள் மற்றும் காய்கறிகள்  நீர் சத்தை உடலுக்கு தருவது மட்டுமில்லமால்,  உடலின் வெப்ப நிலையும்  சீராக வைக்கிறது .குளிர்ச்சியும் தருகிறது  மற்றும் மினரல் ,நோய் எதிர்ப்பு சக்தி
    , விட்டமின்களை தருகிறது .

     பழங்கள் மற்றும் காய்கறிகள்  கோடையினால் ஏற்படும் நோயும் தடுக்கிறது


    கோடையில் சாப்பிடும்  பழங்கள்   மற்றும் அதன் நீர் சத்தும் .

     பழங்கள் 
    •  தர்ப்பூசணி  92 % 
    • திராட்சை    91  %
    • வாழைபழம்  74 %
    • ஆப்பிள்    84 %
    காய்கறிகள்

    • கீரை  92 %
    • தக்காளி  94 % 
    • வெள்ளரிக்காய்  96  %












     

    தெரியுமா உங்களுக்கு கீரைகளின் சத்தும் அதன் பயனும் ?

    சிறுகீரை

    •   இரும்பு சத்து  ---  77 .6 mg 
    •   புரத சத்து       ---  2 .9 gm 
    •   கொழுப்பு சத்து  --- 0 .4 gm 
    •    தாது உப்பு      ---  2 .1 gm 
    •    வைட்டமின்    --- ஏ ,பி,சி

    குணமாகும் நோய் 

    •         கண் நோய் 
    •         பித்தம் 

    பசலைக்கீரை 


    •  இரும்பு சத்து ---- 58 .2 
    •   புரத சத்து   ---- 1 .7 
    • கொழுப்பு சத்து --- 0 .4 
    •   தாது உப்பு   ----1 .8 
    • வைட்டமின்    ---- ஏ ,பி,சி 
     
    குணமாகும் நோய்  

    • கண் நோய்

     

    Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

     
    Design by Free WordPress Themes