Tuesday 1 May 2012

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஆலோசனை


  • குழந்தைக்குத்  தொடர்ந்து தாய்பால் கொடுக்க வேண்டும் .குழந்தை சப்பி குடிக்கும் போது தாய்க்கு நன்றாக பால் சுரக்கும் .


  • குழந்தையின் முதல் 6மாதங்களுக்கு   தாய்பால் மட்டும் கொடுத்தால் போதும் .வேறு எந்த திரவமே  ,தண்ணிரே கொடுக்க  வேண்டாம் .



  • வெயில் காலமாக இருந்தாலும் தாய்பால் மட்டும் குடிக்கும் குழந்தைக்கு தண்ணீர் கொடுப்பது அவசியமில்லை . குழந்தைக்கு தேவையான தண்ணீர்  தாய் பாலில் உண்டு .

  • குழந்தைக்குத்  தேவைப்படும் போதெல்லாம்  அடிக்கடி தாய்ப்பால்  கொடுக்கலாம் .
இரவிலும்  தாய்ப்பால் கொடுக்க  வேண்டும் .ஒருநாளில்  8 முறையாவது  தாய்ப்பால்  கொடுக்க  வேண்டும் .

  • குழந்தை நோயுறும் போதும்  தொடர்ந்து  தாய்ப்பால் கொடுக்க   வேண்டும் .

  • குழந்தை சரியாக தாயின்  மார்பகத்தை கவ்வி , சப்பிக்  குடித்தால்  தான் குழந்தைக்கு  போதுமான  பால் குடிக்க  முடியும் . இதற்கு குழந்தையின் முகவாய்க்  கட்டை  மார்பகத்தைத்  தொட  வேண்டும் .குழந்தையின்  வாய் நன்றாக  திறந்திருக்க வேண்டும் .கீழ் உதடு வெளியே பிதுங்கியிருக்க வேண்டும் .

  • மார்பக காம்பின்  கீழ்பகுதி முழுவதும்  குழந்தையின்  வாய்க்குள் இருக்க வேண்டும் .

  • பால் குடிக்கும் போது  தாய்க்கு வலி  இருந்தால் உடனே  மருத்துவரை  அணுக  வேண்டும் .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes