Sunday 11 December 2011

புதினா கீரையின் பயன்கள்

        புதினா கீரையின் பயன்கள் 

புதினாக்கீரை மனம் மற்றும் சத்துக்கள் நிறைந்தது .

இக்கீரை மேற்கு ஆசியாவிலும்  இக்கீரை நன்றாக வளர்கிறது .

இந்தியாவிலும் அதிக அளவு இக்கீரை பயன்படுத்தபடுகிறது .

இக்கீரையை மாமிச புலவு , காய்கறி புலவு  ஆகியவற்றிக்கு சேர்ப்பதால் மனமும் ருசியையும் உணவில் மீதான ஈடுபாட்டையும்  ஏற்படுத்துகிறது .

இக்கீரை பச்சையாகவும் உணவில் பயன்படுத்தலாம் .


ஊட்டசத்துக்கள்

உயிர்சத்துக்கள்
தாது உப்புக்கள்
இரும்பு , கந்தகம் , சுண்ணாம்பு  முதலிய சத்துக்கள் அதிகம் உள்ளன .

100 கிராம்  கீரையில்

 சுண்ணாம்பு சத்து  200 மில்லிகிராம்
ஆக்சாலிக் அமிலம் 33  மில்லிகிராம்
மனிசத்து 62  மில்லிகிராம்
கந்தகசத்து  84 மில்லிகிராம் 
குளோரின்   34 மில்லிகிராம் 
வைட்டமின் சி அதிகம் உள்ளது .


மருத்துவக்குணம் 

  • இக்கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் பசியைத்தூண்டி உணவிற்கு  ருசியையும் கொடுக்கிறது .
  • வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது .
  • தொடர்ந்து எடுக்கும் விக்கல் நீங்கும் .
  • மயக்கத்தை நீக்க இக்கீரையை கசக்கி நுகரலாம் .
  • தலைவலிக்கு இதன் சாற்றை   நெற்றியில் பூசலாம் .
  • வாத நோய்க்கும் காய்ச்சலுக்கும் ,வறட்டு இருமலுக்கும்  இது சிறந்த மருந்தாகும் .
  • மாதவிடாய் தாமதமாகும் பெண்கள் இக்கீரையை உலர்த்தி தூள் செய்து  தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதவாது  நீங்கும் .
  • புதினா இலையை ஒரு தம்புளர் நீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும் .
  • புதினாவுடன்  இஞ்சியையும் உப்பும் சேர்த்து  அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம்,அஜீரணம் ,பித்தமும் அகலும் .
  • புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம் மூட்டு வலி ,ஆஸ்துமா ,ஈரல் சம்பந்த பட்ட நோய்கள் ,சிறுநீர்  உபத்திரம் நீங்கும் .     
புதினா உடலுக்கு வெப்பம் தருவதால் மூல நோய்கள் உள்ளவர்கள் இக்கீரையை தவிர்த்தல் நல்லது .


 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes